சோளம் – சோயாபீன்ஸ் பற்றாக்குறையால் திரிபோஷா உற்பத்தியில் தடை!

குழந்தைகளுக்கான திரிபோஷா இதுவரை வழங்க முடியவில்லை என சிலோன் திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு திரிபோஷா விநியோகத்தை ஆரம்பித்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.

850,000 திரிபோஷ பொதிகள் விநியோகம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எனினும் சோளம் மற்றும் சோயாபீன்ஸ் தட்டுப்பாடு காரணமாக திரிபோஷா உற்பத்தியை வழமையாக மேற்கொள்வதற்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாக சிலோன் திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *