வரலாற்று சிறப்புமிக்க கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்த்தான வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவ நிகழ்வுகள் (27) கோலாகலமாக ஆரம்பமானது.
அதனை முன்னிட்டு நேற்றிரவு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தார்.
இயற்கை எழில் கொஞ்சும் இவ்வாலயத்தின் ஆடி அமாவாசை நிகழ்வுகளில் கலந்து கிடைத்தமை தமக்கு கிடைக்கப்பெற்ற பாக்கியமாகும்.
காடு சார்ந்த பகுதியில் அமையப்பெற்ற இவ்வாலயத்தை நோக்கி பக்தர்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
அவரவர்நேர்த்திகள், எண்ணங்கள் யாவும் சிறப்பாக அமைய பிரார்த்திப்பதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தை இம்முறை நடாத்துவதில் எரிபொருள் இன்மை காரணமாக சிரமங்களை எதிர்நோக்கினோம்.
இருப்பினும் குறித்த விடயத்தை அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். அவர் இந்நிகழ்வை சிறப்பாக மேற்கொள்ள தேவையான ஒத்துழைப்பை வழங்கினார்.
இல்லையெனில் இந்நிகழ்வை நடாத்தியிரமுடியாது. அதனடிப்படையில் மாற்று மத த்தை சேர்ந்தவராக அரசாங்க அதிபர் இருந்த போதும் இதனை நடாத்த ஒத்துழைப்பை வழங்கியதுடன் இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தமையை பெரிதும் நன்றிகூர்வதாக இதன்போது ஆலய பரிபாலனசபை தலைவர் தெரிவித்தார்.
அரசாங்க அதிபர் இந்நிகழ்வை சிறப்பாக மேற்கொள்ள வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் அவரது சேவைமனப்பாங்கை பாராட்டி ஆலய பரிபாலனசபை நிர்வாகத்தினர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர்.
மேலும் இந்நிகழ்வை சிறப்பாக நடாத்த ஒருங்கிணைப்பை வழங்கிய மூதூர் பிரதேச செயலாளர் எம். பி. எம். முபாரக்கிற்கும் இதன்போது பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமுத்திர சுற்றாடல் அதிகாரசபையின் வடகிழக்கு மாகாண உதவி முகாமையாளர் டி.சிறீபதி உள்ளிட்ட பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





பிறசெய்திகள்