யாழில் 65 வயது பாட்டியை காட்டிற்குள் கடத்தி சீரழிக்க முயன்ற 15 வயது சிறுவனை பிணையில் செல்லுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வயோதிபப்பெண்ணை நேற்று முன்தினம் (25) பொன்னாலை – மூளாய் பகுதியில் வயோதிபப்பெண் மீன் பிடித்து விட்டு வரும் வேளையில் சிறுவன் வழிமறித்துள்ளான்.
இதன்போது அச்சிறுவன் அவ் வயோதிப பெண்ணை வீட்டில் விடுகிறேன் என கூறி சைக்கிளில் ஏற்றியுள்ளார்.
இதனையடுத்து சிறுவன் வீட்டுக்கு கூடடிச்செல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் கூட்டிச் சென்று வண்புநர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளான்.
இதனபோது அவ் வயோதிப பெண் இந்த இடத்தில் தான் எனது பேரன் விரகு வெட்ட வந்துள்ளான் என கூறி அவர் பேரை சொல்லி கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனால் பயந்த சிறுவன் அங்கிருந்து ஓடியதையடுத்து அப்பெண் பொலிஸாரிடம் அளித்த முறைப்பாட்டிற்கமைய சிறுவனை கைது செய்து பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்னறம் அச்சிறுவனை பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த சிறுவனின் தாயார் சவூதியில் பணியில் இருப்பதாகவும் அவனின் அப்பா வீட்டிள் உள்ளபோதே அவன் போதைப்பொருள் பாவிப்பதும் தெரியவந்துள்ளது.
இதன்போது பொன்னாலையில் வசிக்கும் 16 வயதுச் சிறுவன் ஒருவன் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
குறித்த சிறுவன் துவிச்சக்கரவண்டியில் தன்னைக் காட்டுக்கு அழைத்துச் சென்று வண்புணர முயன்றார் என பாதிக்கப்பட்ட பெண்ணால் குற்றஞ்சாட்டப்பட்டது.
சிறுவன் தான் அணிந்திருந்த சேர்ட்டைக் கழற்றி தனது வாயைக் கட்டினார் எனவும் தான் அவனைத் தாக்கிவிட்டு தப்பித்து ஓட முற்பட்டபோது பின்னால் துரத்திவந்து சட்டையைப் பிடித்து இழுத்து வீழ்த்தினான் எனவும் அப்போது அப்பகுதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை தான் உதவிக்கு அழைத்தபோது சிறுவன் அங்கிருந்து தப்பியோடினான் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணால் கூறப்பட்டது.
சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் இன்று (27) புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை, குறித்த சிறுவனின் தாயார் சவுதி அரேபியா நாடொன்றுக்கு பணிப்பெண்ணாக சென்றுவிட்டார் எனவும் தந்தையாருடன் வசிக்கும் சிறுவன் போதைப்பொருள் பாவிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.