மக்களின் பிரச்சினைகள் தீர்ந்தாலே தேர்தல்! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் நிலவும் நெருக்கடிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நெருக்கடிகள் நிறைவடைந்து மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்குத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை பார்வையிடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று வருகை தந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிமல் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *