மட்டக்களப்பு – இலங்கை போக்குவரத்துச் சபை முகாமையாளர் தனியார் பஸ்களுக்கு டீசல் விநியோகிப்பதற்காக 75, 000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இன்று வியாழக்கிழமை (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவ தினமான இன்று மாலை 5.30 மணிக்கு போக்குவரத்து சபையில் மாறுவேடத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் இருந்துள்ள நிலையில், போக்குவரத்து சபை முகாமையாளர் கோரிய இலஞ்சப் பணமான 75, 000 ரூபாவை தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் வழங்கியபோது மறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.
சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்திய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
பிறசெய்திகள்