தொடருந்துகளுக்கான முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு!

தொடருந்துகளுக்கான முதல் வகுப்பு இருக்கை அனுமதிச்சீட்டுக்களுக்கான முன்பதிவுகள் மற்றும் கடுகதி தொடருந்துகளுக்கான முன்பதிவு செய்யப்படாத கட்டணங்கள், ஆகஸ்ட் முதலாம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளன.

இந் நிலையில் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கோட்டை தொடருந்து நிலையத்தில் உள்ள நிலைய அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, தொடருந்து இருக்கை முன்பதிவு கட்டணம் ஒரு மாதத்திற்கு முன்னரும் கணிசமான சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜூலை 25ஆம் திகதி பொதுவான அனுமதிச்சீட்டுக்களின் கட்டணங்களிலும் திருத்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இருக்கை முன்பதிவு கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *