4.4 மில்லியன் வாகனங்கள் பதிவு; 801 நிலையங்களில் QR முறைமையில் எரிபொருள்!

நாடுமுழுவதும் உள்ள 801 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமையைப் பயன்படுத்தி, எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய எரிபொருள் அட்டை முறைமைக்காக, இதுவரையில் 4.4 மில்லியன் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 692 நிரப்பு நிலையங்களிலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் 109 நிரப்பு நிலையங்களிலும், இவ்வாறு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் பதிவுசெய்யப்பட்டுள்ள 44 இலட்சம் வாகனங்களில், 3,945,899 வாகனங்கள் பெற்றோலுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன.

491,756 வாகனங்கள் டீசலுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன. பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களில், அதிக எண்ணிகையிலானவை உந்துருளிகளாகும்.

இதற்கமைய, 2,571,838 உந்துருளிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 7 85,360 முச்சக்கர வண்டிகளும், 614,662 மகிழுந்துகளும், 222,663 வேன்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன், 190,972 பாரவூர்திகளும், 29, 755 பேருந்துகளும், 16,213 விசேட தேவை வாகனங்களும், 4, 992 பிற வாகனங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *