அமெரிக்கா- சீன ஜனாதிபதிகள் பல்வேறு விடயங்களில் இணைந்து செயற்பட இணக்கம்!

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கும் இடையே ஐந்தாவது முறையாக இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் போது, பல்வேறு விடயங்களில் இணைந்து செயற்பட இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

இரு நாடுகளிடையேயான உறவில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையே நேற்று (வியாழக்கிழமை) இந்த உரையாடல் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, பருவ நிலை மாற்றம் மற்றும் சுகாதார பாதுகாப்பு உட்பட இரு நாடுகளும் இணைந்து செயற்படக் கூடிய பகுதிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாகவும் கூறப்படுகிறது.

இரு நாடுகள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும், பல்வேறு துறைகளில் அமெரிக்கா, சீனா இடையேயான ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் நன்மை பயக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி இந்த பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டார்.

தைவான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை என்றும், அந்த பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரான ஒருதலைப்பட்ச முயற்சிகளை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என்றும் பைடன் மேலும், தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *