நீலன் திருச்செல்வத்தின் 23வது நினைவு தினம் !

1999ஆம் ஆண்டு கொழும்பில் குண்டுத்தாரியினால் படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியும், சர்வதேச சட்ட, அரசியல் சாசன, மனித உரிமை நிபுணத்துவ மேதையுமான கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களின் 23 ஆவது நினைவு தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது இன்றையதினம் (29) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் அமரர் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினரால் மூளாயில் நடைபெற உள்ளது.

நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொள்வார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 12ஆவது வருடம் அதேநாளில் இவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *