யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இப்போராட்டத்தில் பங்குபற்றிய போராட்டக்காரர்கள் சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த்திருந்தனர்.
அவர்கள் தெரிவித்ததாவது;
காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராடியவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் .இவர்கள் எதற்காக கைது செய்யப்பட்ட வேண்டும் ? ஜனநாயக ரீதியில் போராடிய இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் .
மக்கள் மீதான வன்முறைகள் ,அநீதிச் செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரி இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம் .
பொருளாதார ரீதியாக நாடு பாதிக்கப்பட்ட நிலையில் எமது சுதந்திரத்தையும் ,உரிமையையும் பாதுக்காக்கும் வகையிலேயே காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இந்த போராட்டத்தினை நடத்தி இருந்தார்கள்.இவர்கள் மீதான பழி வாங்கும் நோக்கில் தவறான முறைப்பாடுகளை வைத்து கைது செய்வதனை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம் .
எமது நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித நேயம் அழிந்து கொண்டு போகிறது. எனவே எல்லோரும் மனித நேயத்துடன் மதித்து நாட்டினை கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்தனர்.