குட்டிச் சைக்கிளில் மாவட்டச் செயலகத்துக்குள் நுழைந்த தமிழ் எம்.பி (படங்கள்,வீடியோ இணைப்பு )

நாட்டில் தற்போது எரிபொருள் பிரச்சினை காணப்படுகிறது.மக்கள் பிரதிதிகள்,அரச அலுவலர்கள்,பொது மக்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீண்ட வரிசையில் நாள் முழுவதும் வீதியில் நின்றாலும் எரிபொருள் கிடைப்பது கேள்விக் குறியாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,நாடளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,மக்கள் தேவை மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக நான்கு சில்லு வாகனங்களைத் தவிர்த்து,சைக்கிளில் பயணித்து வருகின்றார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு ,அரசாங்க அதிபரைச் சந்திக்கப்பதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்,சிறிய சைக்கிள் ஒன்றில் பயணம் செய்து,தனது மக்கள் பணியை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *