வடக்கு மாகாணத்திலுள்ள மதகுருமார்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கியமைக்கு மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர் .
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல சிரமத்தின் மத்தியில் எரிபொருளை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ‘நூணாவிலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் அனைத்து மக்களுக்கும் எரிபொருள் கிடைக்கும் வண்ணம் புதிய நடைமுறைகளின் கீழ் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருளினை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது’ என அவர்கள் கூறினர்.

பிறசெய்திகள்