
இலங்கை மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை என இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் வழங்கல் ஆகியவற்றைப் பிரித்து, இலங்கை மின்சார சபையின் தொகுப்பைத் தொடங்குவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவேன் என்று நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டண மாற்றங்களும் தேவைப்பட்டாலும், அதிக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செலவைக் குறைக்கும் திட்டத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மின்சாரத் துறையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் இதனைத் தெரிவித்ததோடு, 2014ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மின்சார சபை புதிய பிரதான மின் நிலையங்கள் எதனையும் ஆரம்பிக்கவில்லை அல்லது செயற்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பது மின் துறையை புத்துயிர் பெற முன்னோக்கி செல்லும் வழி, ஆனால் அத்தகைய திட்டங்களை முன்னெடுப்பதற்கான அணுகுமுறை மிக சிக்கலானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிறசெய்திகள்