எரிபொருள் மாபியா கும்பல்கள் தொடர்பில் எச்சரித்த கஜேந்திரகுமார் எம்.பி!

எரிபொருள் விற்பனையில் மிக மோசமாக நடந்து கொள்ளும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மற்றும் மாபியா கும்பல்களுடன் இணைந்து பொலிஸார் மோசமான மக்களுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறார்கள்.

இதனை தடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் இல்லையேல் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்றைய தினம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரினைச் சந்தித்த பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ;

பொது மக்களிடையே கணிசமான அளவிற்கு முறைப்பாடுகள் வந்திருக்கின்றன. அந்தவகையில் மாபியா கும்பல்கள் இயங்குவதற்கு பொலிஸார் துணைபோகின்ற வகையில் மோசடிகள் உள்ளடங்கிய விபரங்கள் தொடர்பாக ஒரு கிழமைக்கு மேலாக முறைப்பாடுகள் வந்துகொண்டே இருந்தன இதன் காரணமாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரினை இன்று சந்தித்திருந்தோம்.

அவரிடம் இருந்து 3 விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

1.QR code முறையினை சரியான முறையில் கடைப்பிடித்தால் கணிசமான அளவிற்கு எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கான முறை நடைமுறையில் இருப்பதாக கறுப்பச்சந்தையில் எரிபொருளினை விற்கத்து தடுக்கும் வகையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுத்தல் .

2.யாழில் 15 எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்படும் எரிபொருள் இனி வரும் காலங்களில்குறைந்தது 20 எரிபொருள் நிரப்பு நிலையங்களாக அதிகரிப்பதற்கும் மண்ணெண்ணெய் கிழமையில் 3 தடவைகள் கொண்டுவருவதற்கும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

3.அரச உத்தியோகத்தர்களுக்கு ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் தனியான வரிசை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுத்தல்.

மாபியா கும்பலினால் பெண்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றார்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்க் என்ற கோரிக்கை விட்டிருந்தோம், இந்த கோரிக்கையினை அமுல்படுத்துவதாக கூறியிருந்தார் .

பொலிஸார் ,மாபியா கும்பல்கள் மற்றும் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் இணைந்து நடக்கின்ற மிக மோசமான செயற்பாடுகளை விபரமாக கூறியிருந்தோம்.இதற்கான சாட்சியங்களையும் பெற்றுள்ளோம் எனவே இந்த பொலிஸார் மட்டத்திலான செயற்பாடுகளை கட்டுப்படுத்த வருகின்ற கிழைமைக்குள் நடவடிக்கை எடுக்கா விட்டால் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக உரையாடி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *