நாட்டில் மீண்டும் பாரிய போராட்டங்கள் இடம்பெறும் சாத்தியங்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிருப் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
கோட்டாபய ராஜபக்ச பதவி விலக்கியதைத் தொடர்ந்து ,பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் மூலம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் . ஜனாதிபதியாவதற்கு முன்னே போராட்டங்கள் எல்லாம் நியாயமானது என்பதை எடுத்துரைத்த அவர் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
ஆனால் ஜனாதிபதி ஆக தெரிவாகிய பின்னர் முன்னர் கூறிய கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தற்போது முன்வைத்துக்கொண்டது மட்டுமன்றி அவசரகாலச் சட்டத்தை பிரயோகித்து இளைஞர்களை கைது செய்யும் நிலை உருவாக்கி உள்ளது .
போராடங்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யும் திட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது.அதன் மூலம் நாட்டின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று நினைக்கிறார்கள் என்றால் அது ஓர் பிழையான கருத்து.
மக்களை அடக்கி மக்களின் உரிமையை மதிக்காமல் அரசாங்கம் முன் வர முடியாது மீறி செய்ய முற்படடால் எதிர்காலத்தில் இதைவிட பெரிய போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரித்துள்ளார் .
பிறசெய்திகள்