வெள்ளவத்தை ரயில் விபத்தில் யுவதி உயிரிழப்பு !

வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு 20 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில்,வெள்ளவத்தை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவுக்கு அருகில், கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த ரயிலுடன் இரண்டு யுவதிகளும் மோதப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு யுவதிகளும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யுவதி, உடபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *