யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் அதிகளவிலான மீன்கள் இன்று கரையொதுங்கியுள்ளது.

கடல் நீர் ஏரியில் அதிகளவிலான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதை அந்தப் பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் அவதானித்துள்ளனர்.

இவ்வாறு மீன்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் தெரிய வராத நிலையில், ஏரியின் நீர் மட்டம் குறைந்து உப்பின் செறிவு அதிகரித்ததன் விளைவாக இவ்வாறு மீன்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
பிறசெய்திகள்