இலங்கையில் பெற்றோல் திருடிய சிறுவர்கள் – வைரலாகும் புகைப்படம்

நாட்டில் எரிபொருள் நெருக்கடி தொடர்ந்து செல்கிறது.நாள் கணக்கில் மக்கள் வீதியில் வரிசையில் காத்திருந்தாலும் எரிபொருள் கிடைக்காமல் ஏமாற்றுத்துடன் வீடு செல்ல வேண்டிய சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டுள்ளன.

சிலர் எரிபொருளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.மேலும் சிலர் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் போது ,வாகன டாங்குகளில் உள்ள எரிபொருளை வெளியே எடுத்து வைத்து விட்டு,எரிபொருளை நிரப்புகின்றனர்.

இவ்வாறு டாங்கில் உள்ள எரிபொருளை வெளியே எடுப்பதற்காக நீளமான வயர் ஒன்றை டாங்கில் செலுத்தி,வாயால் உறுஞ்சி எரிபொருளை வெளியே எடுக்கின்றனர்.கூடுதலாக மோட்டார் சைக்கிள்களில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.மூன்று சிறுவர்கள் அதிலே காண்பிக்கப்பட்டுள்ளது.அதிலே ஒருவர் காத்திருக்க,மற்றவர் மோட்டார் சைக்கிள் ஒன்றிலிருந்து பெற்றோலை வயர் மூலம் வெளியே எடுப்பது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது.இந்த புகைப்படம் நியமாகவே எடுக்கப்பட்டதா ,இல்லையென்றால் புகைப்பட கதைக்காக தயார் செய்யப்பட்டு எடுக்கப்பட்டதா என்பது குறிப்பிடப்படவில்லை.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *