இரும்பு உற்பத்தியாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக குற்றச்சாட்டு!

நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளமையினால் இரும்பு உற்பத்தியாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரும்பு பித்தளை, மற்றும் அலுமினியம் உற்பத்தியாளர்கள் குறித்த பொருட்களை சூடேற்றுவதற்கு நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டதனை தொடர்ந்து நிலக்கரியின் விலையும் பாரிய அளவில் அதிகரித்துள்ளது.

இதனால் இரும்பு பித்தளை, மற்றும் அலுமினிய உற்பத்தி துறையானது வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு கிலோகிராம் நிலக்கரியானது 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 650 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் துறைசார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *