பாராளுமன்றத்தை அண்மித்த பொல்துவ சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது மோதலை ஏற்படுத்தியமைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட டொக்டர் பதும் கர்னரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றில் அறிவித்தது.
அத்துடன், இது தொடர்பான போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் ஆயுதங்கள் திருடப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.
சந்தேகநபருக்காக நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதியின் சட்டத்தரணி திரு.றியன்சி அர்சகுலரத்ன, தனது கட்சிக்காரர் விசேட வைத்தியர் மற்றும் இராணுவத்தில் சேவையாற்றியவர் என்பதனால் இராணுவத்தினர் துப்பாக்கியால் தாக்கவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்ததுடன் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
பிறசெய்திகள்