எரிபொருள் வரிசையில் கோர விபத்து! மயிரிழையில் தப்பிய உயிர்கள்

புத்தளம் – தில்லையடி பகுதியில் எரிபொருள் வரிசையில் நின்ற இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இந்த விபத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – தில்லையடி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மாலை டீசல் வழங்கப்பட்டு வரும் நிலையில், குறித்த இரு வாகனங்களும் டீசல் பெறுவதற்காக வரிசையில் சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் வேன் ஒன்றின் முன்பக்க கண்ணாடி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், லொறியொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் கூறினர்.

விபத்துடன் தொடர்புடைய இரண்டு வாகனங்களையும் தமது பொறுப்பில் எடுத்த புத்தளம் போக்குவரத்து பொலிஸார், இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *