சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் நீலன் திருச்செல்வத்தின் 23வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் நடைபெற்றது.

மூளாய் பகுதியில் உள்ள, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது ஈகைச்சுடரேற்றி, அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, இரண்டு நிமிட அக வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தங்க முகுந்தனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கஜதீபன் மற்றும் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் கலந்து கொண்டனர்.

பிறசெய்திகள்
- போராட்டக்காரர்களை தண்டிப்பதை விடுத்து மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குங்கள்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்
- இலங்கைக்கு வழங்கிய கடன்களை நியாயப்படுத்தும் சீனா! அமெரிக்காவுக்கும் அறிவுரை!
- இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
- நான்கு மாதங்களில் ரணில் ராஜபக்சவின் ஆட்சி முடிவிற்கு வரும்! ஹிருணிக்கா எச்சரிக்கை
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka