உக்ரைனிய தாக்குதலில் 40 உக்ரேனிய போர் கைதிகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா தகவல்!

பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் சிறைச்சாலையில் உக்ரைனிய ஷெல் தாக்குதலில் 40 உக்ரைனிய போர் கைதிகள் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒலெனிவ்காவில் உள்ள சிறை முகாமின் மீது ரொக்கெட் தாக்குதலில் மேலும் 75பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

உக்ரைனின் இராணுவம் தாக்குதல் நடத்தியதை மறுத்தது மற்றும் சிறைச்சாலை மீது ரஷ்யா ஷெல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியது.

அந்த இடத்தில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை மறைக்க ரஷ்யா முயல்வதாக உக்ரைன் கூறியது.

ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில காட்சிகள், ஒரு கட்டடத்தின் புகை இடிபாடுகளைக் காட்டுகிறது. அதில் சில மனித எச்சங்கள் இருப்பது போல் தெரிகிறது.

ஆனால் வழக்கமான பீரங்கிகளால் அல்ல, தீப்பிடிக்கும் சாதனத்தால் கட்டடம் தாக்கப்பட்டதாக பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாத டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் செய்தித் தொடர்பாளர் டேனியல் பெசோனோவ் இதுகுறித்து கூறுகையில், கைதிகளை வைத்திருக்கும் படைகளின் மீது நேரடியாகத் தாக்கப்பட்டது என்றும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறினார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹிமார்ஸ் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உக்ரைன் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இதுவென்றும் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், இதில் எட்டு சிறை ஊழியர்கள் காயமடைந்ததாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *