தென்மராட்சி கொடிகாமம் கெற்பேலி பகுதியில் அனுமதி இன்றி மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை இராணுவத்தினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுவதாக இராணுவத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மணல் ஏற்றிய உளவு இயந்திரம் மற்றும் அதில் பயணம் செய்த இருவரையும் இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் கொடிக்காமப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறசெய்திகள்