
மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை மூதூரில் இடம்பெற்றது.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது.
இலங்கை அரசாங்கம் 17 வது தடவையாக IMF யின் உதவியை நாடியுள்ளது. ஜனாதிபதி ரணில் ரணில் விக்கிரம சிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையை பிடிக்க போராடியவர்.
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற வந்த அவர்களது முகவர்.
அத்தோடு மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை அரசாங்கம் கைது செய்கின்ற விடயம் தொடர்பாக பேசினார்.
எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் QR முறை தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பிறசெய்திகள்