யாழில் நாளைய தினம் தமிழர் படுகொலையினை நினைவு கூரும் வகையில் கறுப்பு ஜூலை வார நினைவேந்தலினை முன்னிட்டு போராட்டம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய நாளை தினம் ( 31.07.2022 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் தேசிய கலை இலக்கியப் பேரவையில் (இல.62 கே.கே.எஸ் வீதி கொக்குவில் சந்தி) இடம்பெறவுள்ளது.
இனவாதத்தை எதிர்த்து , இன அடக்குமுறையை ஒழித்து அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசியல் தீர்வுக்காக ஒன்றிணைந்து போராடுவோம் !! என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மக்கள் போராட்ட இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.