இலங்கைக்கு புதிதாக நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை! உலக வங்கி கைவிரிப்பு

போதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிதாக நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட உலக வங்கி, இலங்கையின் மோசமான பொருளாதார நிலை மற்றும் அதன் தாக்கம் குறித்து குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

தற்போதைய கடன்களின் கீழ் மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், மாணவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைப் போக்க உதவுவதாக கூறியுள்ளது.

இந்த நிதியில் ஏறத்தாழ 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்பட்டுள்ளதாக உலக வங்கி வெளிப்படுத்தியுள்ளது.

கூடுதலாக, தற்போதுள்ள பிற திட்டங்கள் அடிப்படைச் சேவைகள், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் விநியோகம், பாடசாலை உணவு மற்றும் கல்விக் கட்டணத் தள்ளுபடி போன்றவற்றிற்கும் ஆதரவை வழங்குவோம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *