
நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகத்தை முறையாக மேற்கொள்ள கியூ ஆர் நடைமுறை தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் எரிபொருள் விநியோகத்துக்கு தற்போது நடை முறைப்படுத்தப்பட்டுள்ள ‘ கியூ ஆர் குறியீடு மூலம் தென்மராட்சியிலுள்ள வெதுப்பக நிலையங்களுக்கு சீராக எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று தென்மராட்சிப் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது .
அதேவேளை எரிபொருள் தட்டுப்பாட்டால் தென்மராட்சிப் பிரதேசங்களிலுள்ள பேக்கரி உற்பத்திகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன . அத்துடன் பேக்கரி உற்பத்திப் பொருள்களை விநியோகிக்கும் வாகனங்களுக்கும் எரிபொருள் இல்லாமையால் விநியோகமும் இடம்பெறுவதில்லை என்றும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தென்மராட்சிப் பிரதேச செயலகத்துடன் தொடர்புகொண்டபோது , எரிபொருள் நிலையங்களுக்கு வரும் டீசல் மட் டுப்படுத்தப்பட்டு வாகனங்களுக்கு விநியோகிக்க வேண்டியுள்ளது . எனினும் வெதுப்பக நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அள வில் டீசல் விநியோகம் இடம்பெற்று வருகின்றன .
இந்த நிலையில் தற்போது “ கியூ ஆர் ” குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதால் பேக்கரிகளுக்கும் , பேக்கரி உற்பத்திப் பொருள்களை விநியோகிக்கும் வாகனங்களுக்கும் தேவையான அளவு டீசல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிறசெய்திகள்