
நாளைமறுதினம் முதல்( 01.08.2022) கியூ.ஆர் குறியீட்டு முறை மட்டுமே நடைமுறையில் இருக்குமென மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது,
இதுவரையில் நடைமுறையிலுந்த கடைசி இலக்க அடிப்படையிலான வாகன இலக்கத் தகடு சிஸ்டம், டோக்கன்கள் மற்றும் இதுவரை செயல்பாட்டில் உள்ள பிற அமைப்புகள் ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு பின்னர் இரத்து செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு பின்னர் குறியீடு மற்றும் கோட்டா முறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூ.ஆர் முறையை பின்பற்றும் எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, வாகனங்களின் அடிச்சட்ட இலக்கத்துடன் பதிவு செய்ய முடியாத வாகன பாவனையாளர்கள் நாளை தொடக்கம் வருமான உரிம இலக்கத்துடன் பதிவு செய்ய முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்து முச்சக்கர வண்டிகளும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் மற்றும் அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெயரிடப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமக்குத் தேவையான எரிபொருள் வகை, வாராந்த எரிபொருள் தேவை மற்றும் எரிபொருளைப் பெற விரும்பும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றைத் தெரிவு செய்து அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறும் அமைச்சு மக்களுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, பொதுப் போக்குவரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்களில் இருந்து வீதி அனுமதிப்பத்திரம் மற்றும்
இலக்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட கோட்டாவின் படி பஸ்களுக்கான எரிபொருள் கோட்டா ஒதுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை சேவையில் ஈடுபடுகின்ற வாகனங்கள், அலுவலக போக்குவரத்து சேவைகள், தொழிற்சாலைகள், சுற்றுலாத்துறை, அம்புலன்ஸ்கள் மற்றும் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட பிற அத்தியாவசிய சேவைகளுக்கான
டீசல் எரிபொருள் தேவைகளுக்கான வசதிகளை இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் வழங்குகின்றன.
அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் ஆம்புலன்ஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவற்றின் வாகனங்களுக்கு அவர்கள் கோரும் அளவு எரிபொருள் வழங்கப்படுகிறது.
இதேவேளை, ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பொலிஸ் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட கோட்டா வழங்கப்படும் எனவும் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து வைப்பவர்கள், விற்பனை செய்தவர்கள் அல்லது எரிபொருளை வழங்குவதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப்
பின்பற்றாதவர்களின் புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்களை 0742 123123 என்ற எண்ணுக்கு வடசப் மூலம் அனுப்புமாறு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பிறசெய்திகள்