இன்றைய பாடசாலை கல்வி நிலை குறித்து கவலை அடைகின்றேன்.கடந்த 2020 ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நிலை காரணமாக பாடசாலை கல்வி ஒழுங்கான முறையில் நடைபெறாமல் மாணவர்கள் நீண்ட காலம் விடுமுறையில் வீடுகளில் நின்றனர்.
பாடசாலை கல்வியை இழந்தது மாத்திரமல்லாமல் பாடசாலைகளில் வழமையாக நடைபெறும் தமிழ்த் தின போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் இதர நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளவில்லை.
இந்நிலை 2021ம் ஆண்டும் அதேநிலை நீடித்தது. தற்போதும் மீண்டும் பாடசாலைகள் ஒழுங்காக நடைபெறுவதில்லை. மறுபுறம் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை எரிபொருள் பிரச்சினை காரணமாகவும் பாடசாலை கல்வி ஒழுங்கான முறையில் நடைபெறுவதில்லை.
இதனால் எதிர்கால பிள்ளைகளின் கல்வி குறித்து மிகுந்த கவலை கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சமூக நலன்விரும்பிகள் என அனைவரும் இனைந்து பாடசாலைகளை ஒழுங்கான முறையில் இயக்குவதற்கு முயற்சிக்கவேண்டும்.
கடந்த வருடங்களில் நடைபெற்ற காபொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியாகவில்லை அத்துடன் உயர்தர வகுப்பும் இன்னும் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவில்லை.
அதேவேளை பாடசாலை கல்வியை மாணவர்கள் இழக்க முடியாது. எனவே அனைத்து தரப்பினரும் இனைந்து பாடசாலையை 5 நாட்களும் இயக்கி இழந்த காலத்தை மீட்கவேண்டும்.
தற்போதைய கல்வியமைச்சர் கல்விப்புலத்தில் ஈடுபாடு கொண்டவர். அதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களிடமும் எமது நிலையை எடுத்துக்கூறவேண்டும். அதேவேளை நடைமுறைச்சாத்தியமான முறையில் பாடசாலையை ஒழுங்காக இயக்கமுடியும் என தெரிவித்தார்.
பிறசெய்திகள்