கொரோனா தொற்று நோய் உலகளவில் பாரிய தாக்கதை விளைவித்திருந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை கொரோனா புரட்டிப் போட்டிருந்தது.
அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் லட்சங்களைத் தாண்டி கோடியை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு தொற்று நோயின் தாக்கும் வேகம் உச்சம் தொட்டிருந்தது.
மரணங்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய அமெரிக்காவை அதிபர் ஜோ பைடன் தடுப்பூசியை கட்டாயமாக்கி முடிந்தளவு கட்டுப்படுத்தியிருந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனாவின் தாண்டவம் மீண்டும் புத்தெழுச்சி பெற்று வருவதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் இந்த அறிகுறிகள் மீண்டும் பழைய சிக்கலுக்குள் அமெரிக்காவை இழுக்கும் சாத்தியங்கள் தென்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.
கொரோனா என்ற நோயின் தாக்கம் குறித்த பயத்தில் இருந்து உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகின்ற இந்த சூழலில் மறுபடியும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையானது புதிய பிரச்சனையை உருவாக்கியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மட்டும் சுமார் 149,452 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் சுமார் 903 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் மட்டுமே இவ்வாறு என்றால் முழு அமெரிக்காவிலும் கணக்கெடுக்கப்பட்டால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.