சர்வகட்சி அரசில் இணைந்துகொள்ள வேண்டும்! – கூட்டமைப்பிற்கு ஐ.தே.க. அழைப்பு

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அதில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு நாட்டுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என அக்கட்சியின் தவிசாளர் விஜிர அபேவர்வதான கேட்டுக்கொண்டார்.

தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கான தீர்வை தருவதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாகவும் விஜிர அபேவர்வதான குறிப்பிட்டார்.

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கூட்டாக இந்த அழைப்பை விடுத்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகமும் மிக முக்கியம் என தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *