சந்தேக நபர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 51 வயது முதியவர் பலி!

கொழும்பு, ஃபோர்ஷோர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (30) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 51 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதியை சேர்ந்தவர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *