கட்டுநாயக்கவில் சிக்கிய தம்பதி; பின்னணியில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் ஒருவரைக் கொலை செய்துவிட்டு துபாய்க்கு தப்பிச் செல்ல முயற்சித்த தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் நேற்றிரவு (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் ஆண் ஒருவரைக் கொலை செய்தார்கள் எனக் கூறப்படும் தம்பதியினர் துபாய்க்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு கல்கிஸ்ஸ தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இந்த தம்பதிக்கு எதிராக தற்காலிக விமான தடை விதித்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *