<!–
முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கத்தின் இணை செயலாளர் நாவொட்டுன்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த நடைமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளதோடு, வரிசைகளில் காத்திருக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் முகக்ககவசம் அணியாது பஸ்களில் பயணிப்பவர்கள், பொது இடங்களில் நடமாடுபவர்கள், ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.