சுகாதாரத் துறையை தொடர்ந்து தடையின்றி நடத்துவதற்கு எரிபொருளின் தேவை மற்றும் விநியோகம் தொடர்பில் எரிபொருள் அமைச்சர் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் சுகாதாரத் துறையில் சேவைகளைப் பேணுவதற்கு, எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான மாற்று வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் GMOA பிரதிநிதி ஒருவர் கூறுகையில்,
சுகாதாரத்துறையில் பணியாற்றும் முழு ஊழியர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு எதிர்பார்க்கப்பட்டதாகவும், அவ்வாறான இறுதி தீர்வு எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்