யாழில் வழிபாடு நடந்து கொண்டிருந்தபோது தேவாலயத்தில் மின்னல் தாக்கம்!

யாழ்ப்பாணத்தில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தேவாலயத்தை மின்னல் தாக்கியது.

குருநகர், புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

இன்று காலை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மழை வீழ்ச்சி பதிவானது.

புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனை நடந்து கொண்டிருந்த போது, தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கியது.

இதனால் மேற்கூரைப்பகுதிகளும், மின் இணைப்புக்களும் சேதமடைந்தன. எனினும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *