அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவருக்கு ஜீவன் திடீர் உத்தரவு !

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் பதவியை உடன் இராஜினாமா செய்யுமாறு சுப்பிரமணியம் கதிர்செல்வனுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில்,இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட கூட்டம் கொட்டகலை சி.எல்.எப்பில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னரே ஜீவன் தொண்டமான், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறிப்பாக,அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக மக்கள் தரப்பில் இருந்து பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *