சட்டம், அமைதி சகல மக்களுக்காகவும் பாதுகாக்கப்படுகின்றன! – பிரதமர்

சட்டம் மற்றும் அமைதி என்பன சகல மக்களுக்காகவே பாதுகாக்கப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் யுவதிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு தயார் எனவும் அதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அவசரகால சட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

எனினும் அவர்களுடன் சிறந்த நட்புணர்வுடன் அரசாங்கம் செயற்படுகிறது.

எனவே, இந்த நிலை தொடர்ந்து செல்லாது என நம்பப்படுவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *