ரத்கம பகுதியில் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் உயிரிழப்பு

ரத்கம – கம்மெத்தேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (31) பிற்பகல் வேளையில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து ரத்கம காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *