சர்வகட்சி அரசாங்கத்தை தமிழர் தரப்பினர் சாதகமாக பரிசீலிக்க வேண்டும்! சபா குகதாஸ்

புதிதாக அமைக்கப்படுகின்ற சர்வகட்சி அரசாங்கம் தமிழ் மக்களுடைய உடனடி, நீண்ட கால பிரச்சனைகள் தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தை மூலமாக பரிசீலினை செய்து இதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாக இருந்தால் தமிழர் தரப்பு சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான விடயத்தை சாதகமாக பரிசீலிக்க முடியும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிகையில்,

நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ஒரு அழைப்பினை விடுத்திருக்கிறார்.
இந்த சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதற்கு சிங்கள பெரும்பாண்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கரம் கொடுத்துள்ளார்கள்.

தமிழர் தரப்பு அரசியல் கைதிகளின் விடுதலையினை ஒரு நல்எண்ண வெளிப்பாடாக ஜனாதிபதி முதலில் ஏற்படுத்த வேண்டும்.

இதனால் தமிழ் மக்களுடைய உடனடி, நீண்ட கால பிரச்சனைகள் தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தை மூலமாக அந்த விடயங்களை பரிசீலிக்கக்கூடியதாக இருக்கும்.

ஏனெனில் தமிழர்களின் உடனடி பிரச்சனைகள் பல தீர்க்கப்பட வேண்டி இருக்கிறது. இதனை தீர்ப்பதாக மூலமாக தமிழர் தரப்பினர் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான விடயத்தை சாதகமாக பரிசீலிக்க முடியும்.

அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டம், காணி அபகரிப்பு, வடக்கு – கிழக்கு பகுதியில் பொருளாதாரத்தினை மீள் கட்டியெழுப்புதல், புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களை வரவழைப்பதற்கான சாதகமான சூழ்நிலை மற்றும் வடக்கு – கிழக்கு பகுதியின் நிதி அதிகாரங்கள் போன்ற விடயங்கள் உடனடியாக கலந்துரையாடப்பட வேண்டும், இதற்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.- என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *