முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ். எம். நிஷார் மௌலானா என்ற நபரே இன்று (31) குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
ஜப்பானின் Taisei நிறுவனத்திடம் 200 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி முன்னாள் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலத சில்வாவுக்கு எதிராக இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிறசெய்திகள்