பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக தீப்பற்றி எரிந்த கார்!

பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இன்று பிற்பகல் இந்த தீ பரவியதாகவும், பயணிப்பதற்கு தயாராகி காரை இயக்க முற்பட்ட போதே இவ்வாறு தீப்பிடித்து கார் எரிந்ததாகவும் தெரியவருகின்றது.

பிரதமர் அலுவலகத்தின் பாதுகாப்பு பிரிவினர் விரைந்து செயற்பட்டு, கொழும்பு மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவுரையில் கண்டறியப்படவில்லை.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *