‘மிஸ்டர் பீன்’ போல செயற்படும் ரணில்!

பிரதமராக பதவியேற்றது முதல் ரணில் விக்கிரமசிங்க வெறும் எதிர்வு கூரல்களையே கூறி வருகின்றார். மக்கள் எதற்காக போராடினார்கள் என்பதை மறந்து மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல், “மிஸ்டர் பீன்” போல செயற்பட்டு வருகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்துக்கு வந்தது மக்கள் பிரச்சனையை தீர்க்க அல்ல ராஜபக்சக்களை காப்பாற்றவே.

வெளிநாடு செல்வதாக இருந்த பஷில் ராஜபக்ச தற்போது வெளிநாடு செல்லவில்லை. கோட்டாபய ராஜபக்சவும் மீண்டும் நாட்டுக்கு வர போவதாக கேள்விப்படுகின்றோம்.

அதற்கு மேலாக பஷில் ராஜபக்ச கட்சி சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

ஆக, நாட்டை அழித்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நிற்கும் ரணில் ராஜபக்சவை விரட்டியடிக்க ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என சமிந்த விஜேசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *