அத்தியாவசிய ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கிளிநொச்சி கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளைய தினம் (01.08.2022) குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில்,காலை 7மணி முதல் 9 மணி வரை விவசாயம் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களிற்கும்.

காலை 9மணி முதல் 10 மணி வரை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பணியாளர்களிற்கும், காலை 10மணி முதல் 11 மணிவரையில் சுகாதார துறையினருக்கும்.

காலை 11மணி முதல் 12 மணிவரையில் இலங்கை போக்குவரத்துச்சபை மற்றும் ஊடகவியலாளர்களிற்கும், நண்பகல்12மணி முதல் 3 மணிவரையில் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேசசெயலகங்கள் மற்றும் சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்களிற்கும்.

பிற்பகல் 3மணி முதல் 4 மணிவரையில் கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களிற்கும்,பிற்பகல் 4 மணி முதல் இரவு 7 மணிவரையில் ஏனைய திணைக்களங்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் பணியாளர்களிற்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *