
கொழும்பு, ஜூலை 31: 3.4 மில்லியன் மக்களுக்கு, அவசர உணவு, ஊட்டச்சத்துக்களை வழங்க உலக உணவுத் திட்டம் திட்டமிட்டுள்ளது. மேலும், இலங்கையில் எஞ்சியுள்ள பெற்றோல் இருப்பு சாதாரண தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது எனவும் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
கடுமையான விநியோகப் பற்றாக்குறையை எதிர்கொள்வதால், அடுத்த 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
மீதமுள்ள பெட்ரோல் இருப்பு சாதாரண தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது என்பது, அன்றாட வாழ்க்கையின் கிட்டத்தட்ட எல்லா அம்சங்களையும் பாதித்துள்ளது, மக்கள் வேலைக்குச் செல்லும் திறனைத் தடுக்கிறது மற்றும் பாடசாலைகள் மற்றும் அரசாங்க சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கிறது என்றும் உலக உணவு திட்டம் கூறியுள்ளது.
இலங்கையில், 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி இருப்பதாகவும், நெருக்கடி வெளிவரும்போது இது மோசமடையக்கூடும் என்றும், அந்த அமைப்பு கூறியுள்ளது.
6.7 மில்லியன் மக்கள் போசனை உணவுகளை உட்கொள்வதில்லை.
இதனையடுத்து, 3.4 மில்லியன் மக்களுக்கு, அவசர உணவு, ஊட்டச்சத்துக்களை வழங்க உலக உணவுத் திட்டம் திட்டமிட்டுள்ளது.
ஜூன் மாதத்தில், உலக உணவு திட்டத்தின், சந்தை கண்காணிப்பு நேர்காணல்களின்படி, உணவுப் பொருட்கள் மற்றும் நுகர்வு பொருட்களின் விலை சுமையாக இருப்பதால், மக்கள் சிறிய அளவில் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.
இலங்கையின் உணவு இறக்குமதிகள் முன்னர் மாதத்திற்கு 130 மில்லியன் டொலர்களில் இருந்து, தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளன. காய்கறிகள் போன்ற சத்தான உணவுகள், நெருக்கடிக்கு முந்தைய விலையை விட இரண்டு முதல் ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளன