மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கங்கை பாலத்தை அண்டிய கடற்பகுதியில் இன்று மாலை படகொன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மூதூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு நீரிழ் மூழ்கி காணாமல் போனவர் மூதூர் – இரால்குழி பகுதியைச் சேர்ந்த யுவான் விக்டல் விரோன் ( வயது 43) என தெரியவருகிறது.
குறித்த நபர் படகு மூலமாக கங்கை பகுதியில் மணல் ஏற்றும் தொழில் செய்பவரெனவும் இவ்வாறு தொழில் நிமிர்த்தம் படகில் சென்றபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பிறசெய்திகள்