ஜூன் மாத வர்த்தக கையிருப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

இந்த வருடத்தின் கடந்த ஜூன் மாதத்தில் வர்த்தக கையிருப்பு உபரியாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2002ம் ஆண்டில் இறுதியாக உபரி பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், 20 வருடங்களின் பின்னர் கடந்த ஜூன் மாதத்தில் இவ்வாறு பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த ஜூன் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்திருந்ததுடன், இறக்குமதி செலவினம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைத்திட்டங்களுக்கு அமைய, மக்கள் எதிர்நோக்கியுள்ள சிரமங்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *