
கொழும்பு, ஓகஸ்ட் 01
விலைச்சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் இவ்வாறு விலைத்திருத்தம் இடம்பெறவுள்ளன.
அதன்படி, எரிபொருளின் விலை 50 முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், முகக்கவசங்களை அணியாதவர்களுக்கு இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.