திருகோணமலை – முள்ளிப்பொத்தானை பிரதேசத்தினை சேர்ந்த முகம்மது யாசீன் நயீம் வயது(48) என்பவர் குவைத்தில் நேற்று (31) மாலை உயிரிழந்துள்ளார்.
திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் குவைத் வைத்தியசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதுடன் அடக்கம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பிறசெய்திகள்